செய்திகள் :

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

post image

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யேமன் தலைநகர் சனா உள்ளிட்ட நகரங்களின் மீது, நேற்று (செப். 25) மதியம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், 4 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 முதியவர்கள் கொல்லப்பட்டதாக, ஹவுதிகளின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 59 குழந்தைகள், 35 பெண்கள் மற்றும் 80 முதியவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுபற்றி, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஹவுதிகளின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

Houthi rebels say Israeli airstrikes on Yemen's capital Sanaa have killed nine people.

ஐ.நாவில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!

பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரத... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக நாடுகளுக்க... மேலும் பார்க்க

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்... மேலும் பார்க்க

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வெளிநாட்டு பர்னிச்சருக்கு 30 சதவிகிதமும், கனரக லாரிகளுக்கு 2... மேலும் பார்க்க