செய்திகள் :

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!

post image

யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது.

ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர் சனாவிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 28) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

ஹவுதிகள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க யேமனிலுள்ள அவர்களது முக்கிய கட்டமைப்புகளை முழுவதுமாகத் தகர்ப்பதற்காக இஸ்ரேல் ’ஆபரேஷன் கோலடன் ஜுவல்’ எனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஓர் பகுதியான, சனா விமான நிலையத்தின் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இந்தப் புதிய தாக்குதல்களில் ஹவுதிகள் பயன்படுத்தி வந்த இறுதி விமானமும் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹவுதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பயன்படுத்தி வரும் துறைமுகங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனவும் சனாவிலுள்ள விமான நிலையம் மீண்டும் மீண்டும் அழிக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்துடன், ஹவுதிகளின் வான்வழிகள் மற்றும் கடல்வழிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, யேமனின் தேசிய விமான நிறுவனமான, யேமனியா ஏர்லைன்ஸின் நான்காவது விமானம் இன்று (மே 28) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக சனா பன்னாட்டு விமான நிலையத்தின் ஹவுதி அதிகாரி காலெத் அல்-ஷைஃப் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிரிகள் யேமனியா ஏர்லைன்ஸின் இறுதியா விமானத்தைக் குறிவைத்து தாக்கி அழித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு எதிரான போரில் காஸா பகுதியின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனின் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மீதான முடக்கங்களை நீக்கிவிட்டால் இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஹவுதிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடிக்க வேண்டும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி உணர்வை பெண்கள் மறைக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீத... மேலும் பார்க்க

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க.. டிரம்ப் அறிவுரை

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், மனைவியிடம் அடிவாங்கும் விடியோ வெளியானது குறித்து நகைச்சுவை... மேலும் பார்க்க

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையின் காரணம் குறித்து அதன் தலைமை செயல் நிர்வாகி சத்யா நாதெல்லா விளக்கம் கொடுத்துள்ளார்.நாதெல்லா கொடுத்திருக்கும் வ... மேலும் பார்க்க

புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு: நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம்... மேலும் பார்க்க

நைஜிரியாவில் மழை, வெள்ளம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் 88 போ் உயிரிழந்தனா். நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த அந்த நகரம் வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்த... மேலும் பார்க்க