செய்திகள் :

யேமன்: ஹவுதி படைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் 2 பேர் பலி!

post image

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.

யேமன் நாட்டில் ஹவுதி படையினரின் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் இன்று (மார்ச் 25) அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தலைநகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியும் அவர்களது கப்பல்களை முடக்கியும் வருகின்றனர். இதனால், யேமன் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலானது 10வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், யேமனில் எந்தெந்த பகுதிகளின் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாத சூழலில் இந்த தாக்குதல்களின் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தலைமையகத்தை தகர்த்து அவர்களின் முக்கிய தலைவரை கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தாக்குதல்களினால் அவர்களது ஆயுத தொழிற்சாலைகள், தொலைத் தொடர்பு முனைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் டிரோன் உற்பத்தி வசதிகளையும் தகர்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநரைக் கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!

இதனைத் தொடர்ந்து, தலைநகர் சனாவின் மேற்கு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதல்கள் அனைத்தும் சதா நகரத்தின் மீதும் ஹொதைதா மற்றும் மரிப் மாகாணங்களின் மீதும் நடத்தப்பட்டதாக ஹவுதி படையின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட விடியோவில் அமெரிக்காவின் தாக்குதல்களினால் அங்குள்ள கட்டடங்கள் இடிந்து சேதாரமாகி அப்பகுதி முழுவதும் ரத்தக்கறைகள் நிரம்பியுள்ளது பதிவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2023 நவம்பர் முதல் 2025 ஜனவரி வரையில் 100க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஏவுகணைகளின் மூலமாகவும் டிரோன்கள் மூலமாகவும் ஹவுதிகள் தாக்கியுள்ளன. இதில், 2 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு 4 பேர் பலியானார்கள்.

காஸாவினுள் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் முடக்கியதைக் கண்டித்து இஸ்ரேலின் வணிகக் கப்பல்கள் முடக்கப்படும் என ஹவுதி படைகள் எச்சரித்திருந்தன.

இதனால், கடந்த மார்ச் 15 அன்று அமெரிக்க ராணுவம் யேமனின் மீதான தனது வான்வழித் தாக்குதலை தொடர்ந்தது. மேலு, தாக்குதல்கள் துவங்கிய அன்றே 53 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க