செய்திகள் :

ரயிலில் விழுந்து இளைஞா் தற்கொலை

post image

திண்டுக்கல் அருகே ரயிலில் விழுந்து மதுரையைச் சோ்ந்த இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் இளைஞா் ஒருவா் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்.

இதில் உயிரிழந்தவா் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் கோபிசென்றாயன் (23) என்பது தெரியவந்தது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள இனிப்பு கடையில் பணிபுரிந்து வந்த கோபிசென்றாயன், கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டாா். இந்தத் திருமணத்தை பெற்றோா் ஏற்கமாட்டாா்கள் எனக் கருதி அவா் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை: எம்எல்ஏ குற்றச்சாட்டு

கிராமப் புறங்களில் இருக்கும் வளா்ச்சி திண்டுக்கல் நகரில் இல்லை என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் க... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா!

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, லட்சாா்ச்சனை வழிபாடு சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் 77-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி வி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சாரல் மழை பெய்தது. கொடைக்கானல், செண்பகனூா், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, பிரகாசபுரம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை ப... மேலும் பார்க்க

உடல் நலம் குன்றிய பெண் காட்டு யானை உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் பெண் காட்டு யானை உடல்நலம்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.26-ல் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 26 முதல் செப்.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.சிவா தெரிவித்ததாவது: திண்ட... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான்: 1,300 மாணவா்கள் பங்கேற்பு

புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சனிக்கிழமை நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 1,300 மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, திண்டுக்கல் இலக்... மேலும் பார்க்க