செய்திகள் :

நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

post image

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்(20) வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றார். ஆனால் அவர் பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், மனநிலை சரியில்லாதவராக அவர் இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

எல்லைச் சுவரையொட்டிய ஒரு மரத்தில் ஏறி நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைய முயன்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து உளவுத் துறை உள்பட பல மத்திய அமைப்புகள் ராமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்

இதுகுறித்து ராமின் மூத்த சகோதரர் உமேஷ் குமார் கூறுகையில், ராமுக்கு இந்தி படிக்கத் தெரியாது.

அவர் பணிபுரிந்த சூரத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தற்செயலாக தில்லிக்கு தவறான ரயிலில் சென்றிருக்கலாம். மேலும் ஏதோ தெரியாத ஆபத்திலிருந்து தஞ்சம் அடைய தனது சகோதரர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றிருக்கலாம்.

அதிகாரிகள் ராமுக்கு எதிராக எந்த ஆட்சேபனைக்குரிய அல்லது சந்தேகத்திற்கிடமான ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

எனவே அவரை தந்தையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைப்புகளின் விசாரணைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ராமை தில்லி போலீஸார் ஒப்படைத்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Ram Shankar Bind (20) who was arrested for attempting to scale a wall of the Parliament complex in Delhi has been released.

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.வட இந்தியாவில் தில்லியை அ... மேலும் பார்க்க

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? -எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி!

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வியெழுப்பியது.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்... மேலும் பார்க்க

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க