செய்திகள் :

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

post image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.

ஐஆர்எஃப்சி பங்குகள் 6.4 சதவீதம் சரிவடைந்து ரூ.141.45க்கும் ஆர்பிஎன்எல் 9 சதவீதம் சரிந்து ரூ.433.45க்கும் ஐஆர்சிஓஎன் பங்குகள் 9.3 சதவீதம் சரிந்து ரூ.200க்கும், ரயில்டெல் பங்குகள் ரூ.379க்கும் விற்பனையாகின.

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2024-25ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு ரூ.2.52 லட்சம் கோடியாக இருந்ததே, இந்த ஆண்டும் நீடிக்கும் என்று பொது பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே இந்த ஆண்டும் ஒதுக்கப்படுவதால், இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு மத்திய அரசு பாராமுகமாக இருந்துவிட்டதாகக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

புதிய வந்தேபாரத் ரயில்கள், படுக்கை வசதிகொண்ட வந்தேபாரத் ரயில்கள், ரயில்களில் கவச் தொழில்நுட்பம் என மேம்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் மட்டும் வெளியான நிலையில், இதற்கேற்ப நிதி ஒதுக்கப்படாததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதாவது 1924ஆம் ஆண்டுதான், பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே பட்ஜெட் பிரித்து தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியது. அது முதல் 92 ஆண்டுகால பழக்கம் 2017 - 18ஆம் நிதியாண்டில் மாற்றப்பட்டு, ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ரயில்வே துறையினருக்கும் சற்று வருத்தத்தையே அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுபோல, விமான நிலையங்களை மேம்படுத்தும் உதான் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 32 சதவீதம் குறைவாக அதாவது ரூ.540 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய பட்ஜெட்டில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.2,873.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2,805.18 கோடியாகும்.

ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்

ஹரியாணாவில் பக்ரா கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். ஹரியாணா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தி... மேலும் பார்க்க

தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!

தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.தில்லியில் வருகிற புதன்கிழமையில் (பிப். 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மா... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்த எண்ணங்களே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொ... மேலும் பார்க்க

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்த... மேலும் பார்க்க