செய்திகள் :

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று நடனம் ஆடியபடியும், தொங்கியபடியும் வீடியோ எடுத்து அதை பாடலுடன் ரிலீஸ் ஆக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். ஓடும் ரயில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்றபடி நடனமாடிய ஷகீலா பானுவுக்கு அவரது இன்ஸ்டா பதிவிலேயே பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவரது வீடியோவை பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர். இதை அடுத்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஷகீலா பானுவின் வீட்டிற்கு சென்று அவரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர. ரயிவே பாதுகாப்புபடை நிலையத்தில் ஆஜரான ஷகீலா பானுவிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது ஆபத்தான முறையில் ரயில் படிக்கட்டுகளில் நின்று நடனமாடி வீடியோ எடுத்ததற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.

மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஷகீலா பானு

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஷகீலா பானு வெளியிட்ட வீடியோவில், "நான் ரயிலில் போகும்போது ஒரு வீடியோ விளையாட்டுக்காக போட்டிருந்தேன். அந்த வீடியோ இவ்வளவு சீரியஸாகும் என நான் நினைக்கவில்லை. பொதுவாக நான் ரிலீஸ் செய்வேன். இந்த ரிலீஸ் போட்டதால் என் முகத்தை வெளியில் காட்ட முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. இது பற்றி அனைவரும் என்னிடம் கேள்விகேட்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நான் செய்தது தவறுதான், விளையாட்டுத்தனமாக செய்துவிட்டேன். இப்போது அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டேன்.

ஷகிலா பானு வெளியிட்ட ரீல்ஸ்

என்னால் அனைவரும் கெட்டுப்போவார்கள் என செய்தி வெளியானதை பார்க்கும்போது கஷ்டமாகிவிட்டது. ரயிலில் நான் செய்த தவறால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். தவறி கீழே விழுந்து இறந்திருந்தாலோ, கை,கால் உடைந்திருந்தாலோ எனது நிலை என்னவாகியிருக்கும் என்பதை இப்போது நினைத்து பார்க்கிறேன். ரயிலில் செல்லும்போது யாரும் படிக்கட்டில் நின்று வீடியோ போடாதீர்கள்" எனக் கூறியிருந்தார்.

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க