செய்திகள் :

ரஷியாவுக்கு 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் வட கொரியா!

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

ரஷியாவுக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப வட கொடியா முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 3 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ள நிலையில், கூடுதலாக வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக வட கொரியா உளவு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சேவைக்குழுவின் ரகசிய கூட்டத்தின்போது தேசிய புலனாய்வு சேவை நிறுவனம் இதனைத் தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனமாக யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையிலான போரியில் ரஷியாவுக்கு ஆதரவாகப் போரிட, முதல் கட்டமாக 1500 வீரர்கள் கொண்ட குழுவை வட கொரியா அனுப்பி வைத்ததை கடந்த வாரம் தேசிய புலனாய்வு சேவை நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

முதல் கட்ட குழு ரஷியாவுக்குச் சென்றதும், அக்டோபர் 8 - 13 வரையிலான தேதிகளில் கூடுதலாக 1, 500 வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

இதையும் படிக்க | இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ரஷியாவுக்கு அனுப்பப்பட்ட வீரர்களுக்கு ராணுவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீரர்களில் 3 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் எஞ்சிய வீரர்கள் அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படை துருப்புகளை அனுப்ப வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பரஸ்பரம் உறுதிமொழியில் கையெழுத்திட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இஸ்ரேல... மேலும் பார்க்க

பூமியைக் கடக்கும் 6 விண்கற்கள்! உரசினால் உலகத்துக்கு உலையா?

ஆறு விண்கற்கள் நாளை (அக். 24) பூமியைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் ஆறு விண்கற்கள் வியாழக்கிழமையில் (அக். 24) கடந்து செல்லவிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 2 திருநங்கைகள் ஆணவக் கொலை!

பாகிஸ்தானில் திருநங்கைகளை ஆணவக் கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்தான் நகரில், ஞாயிற்றுக்கிழமையில் (அக். 20) இரண்டு திருநங்கைகளை மூன்று ப... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்று பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!

கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான சீக்கிய பெண் ஒருவர், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் ... மேலும் பார்க்க

சூடான் மசூதி மீது வான்வழித் தாக்குதலில் 31 பேர் பலி!

சூடானில் உள்ள கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு சாரா குழு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று அல்-இம்... மேலும் பார்க்க