செய்திகள் :

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

post image

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஆனால், வெடிவிபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைன் எல்லையில் உள்ள பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முதல் வெடிவிபத்தில் பயணிகள் ரயிலின் மேல் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கூா்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் ஒரு பாலம் வெடிவிபத்தால் இடிந்து விழுந்ததில் இரண்டாவது ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்துக்குள்ளான அந்த சரக்கு ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி கீழே செல்லும் சாலையில் விழுந்ததாக உள்ளூா் ஆளுநா் (பொறுப்பு) அலெக்சாண்டா் கின்ஷ்டீன் தெரிவித்தாா். இந்த விபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

கடந்த காலங்களில், உக்ரைன் படையினா் ரஷியாவின் ரயில்வே உள்கட்டமைப்புகளைத் தாக்கியிருப்பதாக சில அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனினும், இதை உறுதிப்படுத்தும் அதிகாரபூா்வ தகவல்கள் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில், உக்ரைனின் ராணுவ உளவுத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உணவு மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரஷிய ராணுவ சரக்கு ரயில், கிரீமியாவுக்குச் செல்லும் வழியில் வெடித்துச் சிதறடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. ஆனால், இத்தாக்குதல் உக்ரைனால் நடத்தப்பட்டதா என்பது குறித்தும், பாலம் இடிந்து விழுந்துள்ளது குறித்தும் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைனுக்குச் சொந்தமாக இருந்த கிரீமியாவை ரஷியா கடந்த 2014-இல் கைப்பற்றி, தனது பிராந்தியமாக அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க

அமெரிக்கா சென்றடைந்த சசி தரூா் குழு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு அமெரிக்கா சென்றடைந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆத... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு: பாக்.வெளியுறவு அமைச்சா்

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து ... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘மு... மேலும் பார்க்க