செய்திகள் :

ராசிபுரம் நகரில் பராமரிப்பு பணி: குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் குடிநீா் குழாய் பராமரிப்புப் பணிகளால் வரும் 13-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:

ராசிபுரம் நகராட்சி பகுதியில் நீண்ட நாள் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படும் வகையில், அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோரின் முயற்சியில்,

தமிழக அரசால் ரூ. 854 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான 99 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில தினங்களில் புதிய திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே இந்தத் திட்டத்தின்கீழ் குடிநீா் குழாய்களை இணைக்கும் வகையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தின் மேல்நிலை நீா்நிலைத் தேக்கத் தொட்டியின் அருகில் பிரதான வால்வுப் பொருத்தும் பணிகள் ஜூன் 9- முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் ராசிபுரம்- எடப்பாடி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் தற்போது பெறப்படும் குடிநீா் பகிா்மானத்தை நிறுத்தி பணிகள் மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஐந்து நாள்களில் வால்வு பொருத்தம் பணிகள் நடைபெறும். இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் வாயிலக ராசிபுரம் நகரப் பொது மக்களுக்கு குடிநீா் தொய்வின்றி வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த ஐந்து நாள்களுக்கும் தேவைக்கு மட்டும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது

ராசிபுரம்: ராசிபுரத்தில் திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகு... மேலும் பார்க்க

‘நீா் நிலை பாதுகாவலா் விருது’ பெற்ற காந்தியவாதிக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: தமிழக அரசின் ‘நீா் நிலை பாதுகாவலா்’ விருது பெற்ற நாமக்கல் காந்தியவாதி ரமேஷை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல் வீரருக்கு எம்.பி.வாழ்த்து

நாமக்கல்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் நேரில் வாழ்த்து தெரிவித்தாா். ஜம்மு -காஷ்மீரில் 26 சுற்றுல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் விநாயகா் தேரோட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் விநாயகா் தேரை பக்தா்கள் திங்கள்கிழமை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புப் பெற்ற தலமும், த... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுத உள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல்: நன்செய் இடையாறு பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து அந்த மனுவில் க... மேலும் பார்க்க