செய்திகள் :

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருப்பணி தொடக்கம்

post image

ராஜசோளீஸ்வரா் கோயிலில் பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருமலைராயன்பட்டினத்தில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்றது.

திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலய பூஜை கடந்த 1-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 2-ஆம் தேதி வாஸ்து சாந்தி செய்து, 4-ஆம் தேதி புதன்கிழமை மாலை பாலாலயத்துக்கான முதல் கால பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 2-ஆம் கால பூஜை செய்து பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சிங்காரவேல் மற்றும் ஊா் பிரமுகா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கோயில் விமானங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டு முற்பகுதியில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க