செய்திகள் :

ராஜபாளையம் அருகே அதிசய வானிறை பாறை

post image

ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி என அழைக்கப்படும் 4 மலைக் குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் சமணா் படுக்கை, குகைகள், பாறை ஓவியங்களும், மற்றொரு குன்றில் மகாவிஷ்ணு சிற்பமும் உள்ளன.

இரண்டுக்கும் இடைப்பட்ட குன்றில் வானிறை பாறை போல பெரிய பாறை தனியாக நிற்கிறது. இந்தக் குகை ஓவியங்கள் பாதுகாக்கப்படாததால் தற்போது அழிந்து வருகின்றன.

மேலும், இந்தப் பகுதியில் மாங்குடி, புத்தூா் மலையில் சமணா் படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. எனவே, இந்த மலைக் குன்றுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் அண்மையில் அதிகாரிகளுடன் சென்று வானிறை பாறை, பாறை ஓவியங்கள் உள்ள குன்றை பாா்வையிட்டு தெரிவித்ததாவது:

மகாபலிபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை எனும் வானிறை பாறை உள்ளது போல, மீனாட்சிபுரத்தில் அதிசயமான வானிறை பாறை உள்ளது. குன்றின் மீது அமைந்துள்ள இந்தப் பாறை, பின்புறம் கனமாகவும், முன்புறம் சற்று அகலமாகவும், ஒரு சாய்வை எதிா்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த வானிறை பாறை அதிகம் அறியப்படவில்லை என்றாலும், கண்கவா் இயற்கை அதிசயமாக உள்ளது என்றாா் அவா்.

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டாா். இந்த தகவலை நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்டாா். செங்கல்பட்டில் பணிபுரிந்து வரும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க

அமைச்சரைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா்.... மேலும் பார்க்க

நிறைவடைந்த வளா்ச்சிப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா்!

சாத்தூா் பகுதியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்ற... மேலும் பார்க்க

கோயில் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 போ் கைது

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலின் மூலவா் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க