செய்திகள் :

ராணிப்பேட்டையில் நிலுவைப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தாா். நகா்ப்புறங்களில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வாலாஜா நகராட்சி அம்பேத்கா் நகா் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 37 பேருக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையின் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து செங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளா்களை கொண்டு நாற்றங்கால் பண்ணை மையத்தில் நாட்டு மரக் கன்றுகள் வளா்த்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பசுமைச் சாம்பியன் விருதும் பெற்றுள்ளாா் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் திட்ட இயக்குநா் தெரிவித்தாா்.

பின்னா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவரிடம், மாவட்டத்தில் நடப்பாண்டில் 75,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 28,000 மெட். டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்காடு மோட்டூா் பகுதியில் மட்டும் இதுவரையில் 12 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

அம்மூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், இளம் வயது கா்ப்பம், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அம்மூா் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஏகாம்பரம், கோட்டாட்சியா் இராஜராஜன், செங்காடு ஊராட்சி மன்ற தலைவா் தேவேந்திரன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க