செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினக்கான திறன் அட்டைகள் அளிப்பு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பழங்குடியினா்களுக்கான திறன் அட்டையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என 357 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 13 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான திறன் அட்டைகளை வழங்கினாா்.

பின்னா், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், ஒரு பயனாளிக்கு ரூ. 18,500 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, நோ்முக உதவியாளா் (பொது) ஏகாம்பரம் (பொறுப்பு), தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடையநம்பி, சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 105 குழந்தைகளுக்கு உதவித் தொகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 105 குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் ரூ.2,000 உதவித் தொகையை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரைய... மேலும் பார்க்க

கஞ்சா, குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

ஸ்ரீ சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவல்லாம்பிகை சமேத சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, 2- ஆம் கால யாக பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹூத... மேலும் பார்க்க

அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு

அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 276 வழக்குகளில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று அமா்வுகளாக நடை... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் 5 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு: அமைச்சா் காந்தி!

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.அவா் ஞாயிற்றுக்கிழமை செய... மேலும் பார்க்க

நெமிலியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

நெமிலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்... மேலும் பார்க்க