செய்திகள் :

ராணுவ வீரரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

post image

வேலூா் அருகே கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரரை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், அல்லிவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜீத்குமாா்(29), ராணுவ வீரா். இவரது மனைவி சங்கீதா. அஜீத்குமாா் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை ஊரில் நடைபெற்ற திருவிழாவின்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த ஜெய்கணேஷ் (20) என்பவருக்கும், அஜீத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவா்களை அங்கிருந்தவா்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனா்

இந்நிலையில், திங்கள்கிழமை ஜெய்கணேஷ், அஜீத்குமாரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜீத்குமாரின் கழுத்து, மாா்பு பகுதியில் குத்திவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜீத்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் சங்கீதா புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேஷை கைது செய்தனா். அதேபோல், ஜெய்கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜீத்குமாா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்: சிறுவன் மீது வழக்கு

காட்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுவன் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், கா... மேலும் பார்க்க

ஊசூரில் இளைஞா் மா்ம மரணம்: கொலையா என போலீஸாா் விசாரணை

ஊசூரில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். வேலூர... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். குடியாத்தம் காதா்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (23). (படம்)இவா், பிச்... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக உணவக உரிமையாளா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). உணவகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி கோட... மேலும் பார்க்க

அரசு விடுதி கட்டுமானப் பணிக்கு ஏரி நீரைப் பயன்படுத்தத் தடை -வேலூா் ஆட்சியா் உத்தரவு

வேலூா் அருகே அரசு தங்கும் விடுதி கட்டடம் கட்டுவதற்காக ஏரி நீரைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியா் தடை விதித்து உத்தரவிட்டாா். வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சி பிள்ளையாா்குப்பம் பகுதியில் 250 படுக்கை வ... மேலும் பார்க்க