அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!
ராம்லீலா, துர்கை பூஜை விழாக்களைநள்ளிரவு வரை கொண்டாட அனுமதி: முதல்வர் தகவல்
நமது நிருபர்
ராம்லீலா மற்றும் துர்ûகா பூஜை போன்ற கலாசார நிகழ்வுகளை நள்ளிரவு வரை தொடர தனது அரசு அனுமதித்துள்ளதாகவும், "ராமராஜ்யம் தில்லியில் வர வேண்டும்' என்றும் அதற்காக "நாம் அனைவரும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்' என்றும் முதல்வர் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், "நமது ஹிந்து பண்டிகைகள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன என்று நான் எப்போதும் கூறுவேன். எந்த ராம்லீலா இரவு 10 மணிக்கு முடிவடைகிறது? துர்கை பூஜை இரவு 10 மணிக்கு முடிவடையாது. குஜராத்தில், தாண்டியா இரவு முழுவதும் நடக்கலாம். பின்னர் தில்லி மக்கள் மட்டும் என்ன தவறு செய்தார்கள்.
அதனால்தான் இந்த முறை நாங்கள் நள்ளிரவு 12 மணி வரை அனுமதி அளித்துள்ளோம். அனைத்து ராம்லீலா, துர்கா பூஜை மற்றும் பிற கலாசார நிகழ்ச்சிகளும் இப்போது நள்ளிரவு வரை நடைபெறலாம்' என்றார்.
தில்லி அரசு ராம்லீலா, துர்கை பூஜை, தசரா மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகள் மற்றும் பொது முகவரி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரத்தை நீட்டித்தது. செப்டம்பர் 22- ஆம் தேதி முதல் அக்டோபர் 3- ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த தளர்வுக்கு துணை நிலை ஆளுநர் வி. கே. சக்சேனா ஒப்புதல் அளித்தார்.
இந்த நீட்டிப்பு சப்தம், மாசு விதிகளை பின்பற்றுவதற்கு உள்பட்டு இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இருக்கும். குடியிருப்புப் பகுதிகளில், ஒலி அளவு 45 டெசிபல்களுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா இந்த நடவடிக்கைக்கு துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். இது ராம்லீலா குழுக்களின் நீண்டகால கோரிக்கை என்று அவர் கூறினார்.