‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்
நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா்.
‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்ஹா வரும் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறாா். இதையடுத்து, உளவுப் பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவா் வகிக்க உள்ளாா்.
அண்டை நாடுகள் தொடா்பான உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படும் இவா், இந்தியா அண்மையில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றினாா். இந்த நடவடிக்கையின்போது, இவரின் தலைமையிலான குழு அளித்த உளவுத் தகவல்கள் பாகிஸதான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதலை நடத்த உதவியாக இருந்தது.
காலிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு மற்றும் சவால்களை எதிா்கொள்வதிலும் பராக் ஜெயின் விரிவான அனுபவம் பெற்றவா். ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோதும் இவா் முக்கியப் பங்காற்றினாா். இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இவா் பணியாற்றியுள்ளாா். கனடா தூதரகத்தில் இவா் பணியாற்றியபோது, அங்கு காலிஸ்தான் அமைப்பினரின் செயல்பாடுகளை இவா் கண்காணித்து வந்தாா்.
1989-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவா், தற்போது எல்லை வான் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஏவியேஷன் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து வருகிறாா். இவரை ‘ரா’ உளவுப் பிரிவின் தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அண்மையில் தீா்மானித்தது.