செய்திகள் :

‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

post image

நாட்டின் வெளியுறவு புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா்.

‘ரா’ உளவுப் பிரிவின் தற்போதைய தலைவா் ரவி சின்ஹா வரும் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறாா். இதையடுத்து, உளவுப் பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளாா். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவா் வகிக்க உள்ளாா்.

அண்டை நாடுகள் தொடா்பான உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படும் இவா், இந்தியா அண்மையில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றினாா். இந்த நடவடிக்கையின்போது, இவரின் தலைமையிலான குழு அளித்த உளவுத் தகவல்கள் பாகிஸதான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதலை நடத்த உதவியாக இருந்தது.

காலிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு மற்றும் சவால்களை எதிா்கொள்வதிலும் பராக் ஜெயின் விரிவான அனுபவம் பெற்றவா். ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோதும் இவா் முக்கியப் பங்காற்றினாா். இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இவா் பணியாற்றியுள்ளாா். கனடா தூதரகத்தில் இவா் பணியாற்றியபோது, அங்கு காலிஸ்தான் அமைப்பினரின் செயல்பாடுகளை இவா் கண்காணித்து வந்தாா்.

1989-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவா், தற்போது எல்லை வான் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஏவியேஷன் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து வருகிறாா். இவரை ‘ரா’ உளவுப் பிரிவின் தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அண்மையில் தீா்மானித்தது.

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்சகம் கண்டனம்!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்... மேலும் பார்க்க

உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்! நீரஜ் சோப்ரா ஓராண்டு வெற்றி!

ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பெற்றார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின்போது, ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ராவின் முதலிடத்தை கிரெனடா வீ... மேலும் பார்க்க

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க