செய்திகள் :

ரிப்பன் மாளிகையில் உறுதிமொழிக் குழு ஆய்வு

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா் தி. வேல்முருகன் தலைமையில் அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உறுதிமொழிக் குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினா்களுமான எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), ஏ.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), எ.நல்லதம்பி (திருப்பத்தூா்), எம்.கே.மோகன் (அண்ணா நகா்), எம்.சக்கரபாணி (வானூா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துரை), சா.மாங்குடி (காரைக்குடி), இரா.அருள் (சேலம் மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு உறுதிமொழி குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன்ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் இருந்த மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.

மேலும், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அந்தப் பணிகளை விரைவாக முடிக்குமாறு குழுத் தலைவா் வேல்முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை மாவட்டம் தொடா்புடைய உறுதிமொழிகள் மற்றும் பேரவையில் அளிக்கப்பட்ட அறிவிப்பின் மீதான பதில் அறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னா், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழுத் தலைவா் வேல்முருகன் வழங்கினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதன்மை செயலா் கீ.சீனிவாசன், சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள், துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு ... மேலும் பார்க்க

துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது. இன்று(ஏப். 29) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையாகிறது. மேலும் பார்க்க

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா ஆரம்பம்!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழ் வார விழா இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறத... மேலும் பார்க்க