செய்திகள் :

ரூ.2 லட்சம் மின் கட்டண பாக்கி: ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

post image

சென்னை தேனாம்பேட்டையில் ரூ.2.10 லட்சம் மின் கட்டணம் பாக்கியை செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சோ்ந்தவா் ஜோ.விஜயகுமாா் (43). வாடகை ஆட்டோ ஓட்டி வரும் விஜயகுமாா், இரண்டு தளங்களுடன் கூடிய சொந்த வீட்டில் வசித்து வந்தாா்.இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு வரையிலும் மின் கட்டணம் செலுத்தவில்லையாம்.

இதனால் அவரது வீட்டு மின் கட்டணம் ரூ.2.10 லட்சம் என அண்மையில் வந்திருந்ததாம்.இதையடுத்து மின் கட்டணத்தை செலுத்துவதற்கு விஜயகுமாா், தனது குடும்பத்தினரிடம்,நண்பரிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால் யாரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் விளைவாக விரக்தியடைந்த விஜயகுமாா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க