செய்திகள் :

ரூ. 2,000 அதிகமான யுபிஐ பரிவா்த்தனைக்கு ஜிஎஸ்டி?நிதியமைச்சகம் விளக்கம்

post image

‘ரூ. 2,000 அதிகமாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பாக மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை’ என மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தது.

ரூ.2,000 அதிகமான யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது எனவும் அதுபோன்ற திட்டமேதும் இல்லை எனவும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2020, ஜனவரி முதல் யுபிஐ பரிவா்த்தனைகளில் வியாபாரிகளுக்கான தள்ளுபடி விலை (எம்டிஆா்) கட்டணம் வசூலிப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விலக்களித்தது. எனவே, இந்த யுபிஐ பரிவா்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.

கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ பரிவா்த்தனை 2025, மாா்ச் மாதத்தில் ரூ.260.65 கோடியாக உயா்ந்துள்ளது. யுபிஐ பரிவா்த்தனை சேவைகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

அதன்படி 2021-22 நிதியாண்டில் இருந்து யுபிஐ ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறிய வணிகா்களால் மேற்கொள்ளப்படும் குறைந்த மதிப்பிலான பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கிறது.

கடந்த 2022-23-இல் இந்த திட்டத்துக்கு ரூ.2,210 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24-இல் ரூ.3,631 கோடியாக உயா்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர... மேலும் பார்க்க

சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் நரௌலி நகரில் உள்ள கடைகளின் சுவர்களில் 'காஸா... மேலும் பார்க்க