செய்திகள் :

ரூ.3,796 கோடி நிதியை நிலுவை: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

post image

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், 2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாநில அரசிற்கு ரூ.45,182 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை (2025-26) அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அப்போது,

மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!

எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

ரூ.45,182 கோடி இழப்பு

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது.இதனால், 2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாநில அரசிற்கு ரூ.45,182 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.3,796 கோடி நிதியை நிலுவை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால், 27.11.2024 முதல் 11.03.2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.2,839 கோடி ஊதியம் மற்றும் ரூ.957 கோடி நிதி என மொத்தம் ரூ.3,796 கோடி நிதியை நிலுவை வைத்துள்ளது மத்திய பாஜக அரசு.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்க மறுத்துள்ள மத்திய அரசு, மிக்ஜாம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.776 கோடி மட்டுமே விடுத்தது.

இந்த வஞ்சிப்புகள், மாநில அரசின் நிதிநிலையை வெகுவாக பாதித்துள்ளது என்றார்.

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: துறைகள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

இந்திய அரசின் அழைப்பை ஏற்று ரைசினா உரையாடல் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்ஸர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன் இண... மேலும் பார்க்க

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்கள... மேலும் பார்க்க

இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலி... மேலும் பார்க்க

பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரிடம் நீதிபதி விசாரணை!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பார்சிலோனாவின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம், சவூதி அரேபியாவில் ஸ்பானிஷ் சூப... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்!

நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்களினால் ஹோலி பண்டிகை கடூம் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை பராமரிக்கும் எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்ட... மேலும் பார்க்க