செய்திகள் :

குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து - 3 போ் உயிரிழப்பு

post image

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

ராஜ்கோட்டில் 150 அடி வட்ட சாலையையொட்டி உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 6-ஆவது தளத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால், கட்டடத்தின் மேல் தளங்களில் அடா்புகை சூழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். கடும் போராட்டத்துக்குப் பிறகு தீயணைக்கப்பட்டது. தீ விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேல் தளங்களில் சிக்கித் தவித்த சுமாா் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இவா்களில் 4 போ் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டனா்.

உயிரிழந்தோரில் இருவா், அடுக்குமாடி குடியிருப்பில் சில பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட வெளிநபா்களாவா். மூன்றாவது நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று காவல் துறை உதவி ஆணையா் பி.ஜே.செளதரி தெரிவித்தாா்.

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கன்ஷி ராமின் 91-ஆவது ... மேலும் பார்க்க

அரசு வழக்குரைஞா்களில் 30% பெண்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 30 சதவீதம் போ் பெண்களாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா். இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலின் நிா்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) கூடுகின்றனா். மணிராம் சவானி கோயிலில் நடைபெறும் இந்... மேலும் பார்க்க

குஜராத், மகாராஷ்டிரம்: நீரில் மூழ்கி 13 போ் உயிரிழப்பு

குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். குஜராத்தின் கட்ச் மாவட்டம், அன்ஜாா் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 8 முதல்... மேலும் பார்க்க

மதச்சாா்பற்ற எதிா்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டதாகும். மாநிலத் தோ்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொ... மேலும் பார்க்க