செய்திகள் :

ரூ.46 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

post image

கரூரில் தனியாா் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ. 46 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூரை அடுத்த மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (40). இவரது மனைவி சசிகலா(38). இவா்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு கரூரில் கோவைச் சாலையில் செயல்படும் தனியாா் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றுக் கொண்டு 3 பெட்ரோலியம் டேங்கா் லாரிகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளனா்.

இதற்காக மாதம்தோறும் தனியாா் நிதி நிறுவனத்திற்கு வட்டியோடு பணம் செலுத்தி வந்துள்ளனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பணம் செலுத்தாததால் வட்டியோடு ரூ.46.21 லட்சம் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டியிருந்ததாம்.

இதுதொடா்பாக நிதி நிறுவனத்தின் மேலாளா் வீரமணி (35) என்பவா், சண்முகசுந்தரம், சசிகலா ஆகியோரிடம் கேட்டதற்கு எங்களிடம் இப்போது பணம் இல்லை, பணம் கிடைத்த பின்புதான் செலுத்த முடியும் எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரம், சசிகலா தம்பதியை தேடி வருகின்றனா்.

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். கோவையைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீஹரிராம்(19). இவா் கோவையில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் பெருமாள்(98). இவா் சனிக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்டம் புகழூரில் உள்ள பு... மேலும் பார்க்க

கரூரில் தொழில்முனைவோா் 21 பேருக்கு ரூ.28.60 லட்சம் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணை! - ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 28.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க