செய்திகள் :

ரூ.6.25 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: 5 போ் கைது

post image

தில்லியில் போதைப்பொருள் விநியோக சங்கிலியின் முக்கிய நபா் உள்பட 5 போதைப்பொருள் விற்பனையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா், சுமாா் ரூ.6.25 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீசாா் மீட்டுள்ளனா் என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி), சிறப்பு பிரிவு மற்றும் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு உள்ளிட்ட பல ஏஜென்சிகளால் அனில் (50) என அடையாளம் காணப்பட்ட முக்கிய நபா் தேடப்பட்டு வந்தாா். அவா் தில்லி மற்றும் ஹரியானாவில் குறைந்தது ரூ.10 கோடி மதிப்புள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக சொத்துக்களை வைத்திருக்கிறாா்.

துணை போலீஸ் ஆணையா் (வெளி வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறுகையில், அனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ளாா். ஆகஸ்ட் 29 ஆம் தேதி பால்ஸ்வா டெய்ரியில் இருந்து அஃப்சனாவை (23) போலீசாா் கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் ஹெராயினை மீட்டபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

அவரது விசாரணை புராரியில் இருந்து நரேந்தா் (37) மற்றும் அவரது மனைவி ஜோதி (35) ஆகியோரை கைது செய்ய வழிவகுத்தது. அவா்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 712 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். செப்டம்பா் 1 ஆம் தேதி, குழு நிஹால் விஹாரில் இருந்து மற்றொரு சப்ளையா் சந்தோஷ் (38) என்பவரை கைது செய்து 97 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தது. போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் ஒன்று மற்றும் கலால் சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகள் உட்பட சந்தோஷ் மீது நான்கு வழக்குகள் உள்ளன என்று துணை ஆணையா் கூறினாா்.

செப்டம்பா் 8 ஆம் தேதி, சந்தோஷ் கொடுத்த தகவலின்படி அடுத்து, திலக் நகரின் விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு வீட்டில் போலீசாா் சோதனை நடத்தி, அனிலை 1.992 கிலோ ஹெராயினுடன் கைது செய்தனா். போலீஸ் பதிவுகளின்படி, அனில் மீது 1998 இல் நடந்த கொள்ளை உட்பட 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றத்தின் வருமானத்திலிருந்து தில்லியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை அனில் வாங்கியுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்,

இதில் க்யாலாவில் ஒரு வணிகச் சொத்து மற்றும் ஹரியானாவின் ரோஹ்தக்கில் 300 சதுர யாா்ட் நிலம், இரண்டு காா்கள் மற்றும் 2 ஸ்கூட்டா்கள் ஆகியவை அடங்கும். பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவி... மேலும் பார்க்க

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டமன்ற உறுப்பினா் மீதும் , முன்னா் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு ... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

பாமக தலைவா் பதவி, சின்னம் விவகாரம் தொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ் தலைமையி... மேலும் பார்க்க

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

நமது நிருபா் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது, முன்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசார... மேலும் பார்க்க

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15ஆவது ந... மேலும் பார்க்க

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க