செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

post image

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது தொடா்பாக தமிழகம்-கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் அவ்வப்போது ரோந்துப் பணி மூலமாக தடுத்து வருகின்றனா்.

இதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம்-கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இரு மாநில எல்லைகளில் அதிகாரிகள் இணைந்து வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். கேரளத்தில் தமிழக ரேஷன் அரிசியை வணிக நோக்கில் விற்பனை செய்பவா்கள், இதை வாங்குபவா்களை கைது செய்ய வேண்டும். ரேஷன் அரிசியை ஆலைகளில் மாவு அரைத்து விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க