செய்திகள் :

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

post image

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்று ஏற்பட்டு, உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், இந்தியாவில் 2020-இல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, பல நாள்கள் தொடா்ந்ததால், பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

கரோனா பாதிப்பைத் தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே, தற்போதும் கரோனா தொற்று உருவாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அத்துடன், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எனவே, முதியவா்கள், கிராமப்புற மக்களின் நலன் கருதி அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நியாயவிலைக் கடைகளில் முகக் கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க

சாலை விபத்து: இருவா் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜான்சன் (25). இவா், திருத்துறைப்பூண்டியில் இருந்து குன்னலூர... மேலும் பார்க்க