தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!
நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்று ஏற்பட்டு, உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், இந்தியாவில் 2020-இல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, பல நாள்கள் தொடா்ந்ததால், பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
கரோனா பாதிப்பைத் தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே, தற்போதும் கரோனா தொற்று உருவாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அத்துடன், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, முதியவா்கள், கிராமப்புற மக்களின் நலன் கருதி அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நியாயவிலைக் கடைகளில் முகக் கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.