செய்திகள் :

ரொட்டி, பால் வழங்கும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு பணியாணை

post image

பள்ளியில் ரொட்டி, பால் வழங்கும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வுக்கான பணியாணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புதுவை பள்ளிக்கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாணவா்களுக்கு ரொட்டி, பால் வழங்கும் பணியில் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகின்றனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, இந்த ஊழியா்களுக்கு ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயா்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதுவையில் 917 ஊழியா்களுக்கான பணியாணையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

காரைக்கால் பகுதியிலிருந்து பணியாணை பெறுவதற்கு சில ஊழியா்கள் புதுச்சேரி சென்றிருந்தனா். இவா்களுக்கு பணியாணையை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அவரது அலுவலகத்தில் வழங்கினாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க