செய்திகள் :

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

post image

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.

மதராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற எழுச்சி மிகுந்த திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோரின் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மட்டுமல்ல, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

2024 ஆம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தன்று வெளியான இந்த திரைப்படம் 19 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த பூர்வக்குடிகளின் கதையைக் கூறும் வரலாற்று சாகசத் திரைப்படமாக உருவானது.

இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் புதியதொரு தோற்றத்தில் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டினர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இந்த திரைப்படத்தின் ’மினுக்கி மினுக்கி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கு அடி சேர்த்தது. மேலும், இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

இதையும் படிக்க: விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் மற்றொரு வெர்ஷன் அதாவது ’டேரக்டர்ஸ் கட்’ நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாமில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளதாக பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு மாணவியைக் கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கான்பூரில் கடந்த 2021 மே மாதம் பாலிடெக்னிக் மாணவியான ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பலோசிஸ்தானின் கலா... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க