செய்திகள் :

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

post image

நிலக்கோட்டை: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அருகேயுள்ள அனுகிரகா பள்ளியில் கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை 9, 14- வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான ரோல்பால் போட்டிகள் நடைபெற்றன. 

இதில், தமிழகம் முழுவதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் 9-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆண்கள், பெண்கள் அணி என இரண்டு பிரிவிலும் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்தன.

14-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆண்கள் அணி முதலிடமும், பெண்கள் அணி இரண்டாமிடமும் பிடித்தன.

இந்த நிலையில், வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட அணி மாணவ, மாணவிகளுக்கு சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணைத் தலைவரும், சா்வதேச நடுவருமான பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்கச் செயலா் எம்.பி.சுப்பிரமணியம், பயிற்சியாளா்கள் தங்கலட்சுமி ஆகியோா் கலந்த கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி, பரிசுகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பயிற்சியாளா்கள் சக்திவேல், கலையரசன், கல்யாண், ராஜதுரை, மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

மலைச் சாலையில் ஆண் சடலம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலை... மேலும் பார்க்க

ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் ரம்ஜான்பேகம் தலைமை வ... மேலும் பார்க்க