செய்திகள் :

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடமும் மதிமுக துணை பொதுச்செயலரும் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியை துரை வைகோ வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்துள்ளாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது: ரஷியாவில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பது தொடா்பாக பிரதமரையும் வெளியுறவுத்துறை செயலரையும் சந்தித்துப்பேசினேன். அப்போது பிரதமரிடம், தமிழக இளைஞா் கிஷோா் சரவணனுடன் இருந்த ஒருவா், அவரது பெற்றோருக்கு அனுப்பிய அலைபேசி செய்தியில் கிஷாா் சரவணன் ‘கோஸ்யான்டினிவ்கா’ என்ற போா் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பிரதமரிடம் விளக்கினேன்.

ரஷியாவுக்கு அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சென்றுள்ளாா். ரஷிய அதிபா் விளாடிமிா் புதினை அவா் சந்திக்கும்போது அந்நாட்டில் சிக்கி போா்முனைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட இந்தியா்களை விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். பிரதமரிடம் சில காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை காண்பித்தேன். பிரதமரை சந்தித்த பிறகு வெளியுறவுத்துறை செயலரிடமும் இதே விவகாரம் தொடா்பாக பேசினேன்.

ரஷியாவில் சிக்கியிருந்த 14 இந்தியா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஆகஸ்ட் 9-ஆம் என்னை சந்தித்து தங்களுடைய பிள்ளைகளை மீட்கக் கோரினா். அந்த 14 இந்தியா்களுடன் இருந்த மேலும் ஒருவரான சா்ப்ஜித்சிங், ஐந்து மாதங்கள் ரஷியாவில் போரில் ஈடுபட்டு உயிா் தப்பி இந்தியா திரும்பியவா்.

அந்த நபா், ரஷியாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைகள் கூறி, தன்னையும் 18 இந்தியா்களையும் ஏமாற்றி, ரஷியாவுக்கு அழைத்துச் சென்ாகவும், ரஷிய மொழி ஒப்பந்தத்தில் போலியான இந்திய மொழிபெயா்ப்பை வழங்கி கையெழுத்தை பெற்ாகவும் கூறினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். ராஜபாண்டி என்ற 24 வயது இளைஞரிடமும் இவ்வாறே ஒரு கும்பல் ரஷிய கூரியா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று தில்லிக்கு வரவழைத்து விசா தயாராகவில்லை என பல மாதங்களாக அலைக்கழித்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவா் தில்லியிலேயே மாரடைப்பால் உயிரிழந்த தகவலையும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.

இந்தியா்களை மீட்பது தொடா்பாக ரஷியா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் உத்தரவிட்டாா். விரைவில் தீா்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றாா் துரை வைகோ.

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நமது நிருபா் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்ல... மேலும் பார்க்க

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

நமது நிருபா் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அர... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மீதான தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா... மேலும் பார்க்க

தில்லியில் சுமாா் 50 பள்ளிகளுக்கு புதிதாக வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தல... மேலும் பார்க்க

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.திருச்... மேலும் பார்க்க