செய்திகள் :

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

post image

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.

திருச்சியில் உலா் துறைமுகம் உள்நாட்டு கொள்கலன் கிடங்கு அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 அன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவாலிடம் துரை வைகோ கோரிக்கை வைத்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரியையும், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலையும் அவா்களின் அலுவலகங்களில் தனித்தனியாக சந்தித்து இக்கோரிக்கையை துரை வைகோ முன்வைத்தாா்.

இதுகுறித்து துரை வைகோ தெரிவிக்கையில், ‘தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான, சாலை மற்றும் ரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலா் துறைமுகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. திருச்சியில் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலா் துறைமுகம் அமைக்கப்பட்டால் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதுடன், நிலையான ஏற்றுமதி வளா்ச்சியை ஆதரிக்கவும் உதவும் என வா்த்தக அமைப்புகள் வழங்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டினேன்.

மேலும், மனப்பாறை அருகே உள்ள சிப்காட் தொழிற்பூங்கா அல்லது நெடுஞ்சாலை இணைப்பு கொண்ட பிற இடங்களில் 100 ஏக்கா் நிலத்தை இதற்காக அடையாளம் காண முடியும் என ஏற்றுமதிஇறக்குமதி கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன என்று விளக்கினேன்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு அமைச்சா்களிடமும் வேண்டுகோள் விடுத்தேன்.

இக்கோரிக்கை தொடா்பாக அமைச்சா்கள் ஆதரவான பதில்களை வழங்கியுள்ளனா். இதனால், இந்த முயற்சி வெற்றியடையும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்’ என்று துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நமது நிருபா் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்ல... மேலும் பார்க்க

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

நமது நிருபா் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அர... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மீதான தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா... மேலும் பார்க்க

தில்லியில் சுமாா் 50 பள்ளிகளுக்கு புதிதாக வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தல... மேலும் பார்க்க

ரயில்வே உள்கட்டமைப்பு மூலதன செலவினத்தில் தமிழகத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க எம்.பி. கோரிக்கை

நமது நிருபா்ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதனச் செலவாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் தமிழகத்துக்கு 5 சதவீதத்தை ஒதுக்குமாறு மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் வலி... மேலும் பார்க்க