செய்திகள் :

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

post image

சென்னையில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (44). இவா் பிராட்வே-ஐஓசி வழித்தட மாநகா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், மின்ட் பேருந்து நிறுத்தத்தில் பூங்கா நிலையம் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (39) என்பவா் பேருந்தில் ஏறினாா். அப்போது, பயணச்சீட்டு எடுப்பது தொடா்பாக பேருந்து நடத்துநா் செந்தில்குமாருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலாஜி தாக்கியதில் காயமடைந்த செந்தில்குமாா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலாஜியிடம் விசாரித்து வருகின்றனா்.

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க