செய்திகள் :

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

post image

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீதரின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க பொய்யாகுளம் தியாகுவுக்கும் ஸ்ரீதரின் இன்னொரு கூட்டாளியான தினேஷ்குமாருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இந்தநிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த ரௌடி வசூல்ராஜா என்பவர் பட்டபகலில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 13பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் பொய்யாகுளம் தியாகுவை போலீஸார் தேடிவந்தனர்.

தியாகுவின் மனைவி அனுப்பிய புகார்

இந்நிலையில் காஞ்சிபுரத்திலுள்ள பல்வேறு பிரபல துணி கடைகளில் தியாகுவின் பெயரைச் சொல்லி அவரின் டீம் மாமூல் வசூலிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் கஞ்சா வியாபாரியான ROBERRY கார்த்திக், யுகேஷ், சௌந்தரராஜன்,விஷ்வா ஆகியோர்தான் மாமூல் வசூலிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பொய்யாகுளம் தியாகு தலைமறைவாக இருக்கும் இடம் குறித்து தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனால் அங்குச் சென்று தியாகுவை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற தியாகுவுக்கு கால், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் தியாகுவை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

தியாகுவை போலீஸார் பிடித்த தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி சுதா என்பவர் டிஜிபி அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதில், ``நானும் அவரும் போனில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்தான் போலீஸார் அவரைப் பிடித்து சென்றுவிட்டனர். தற்போது அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அங்கே கை, கால்கள் முறிவு ஏற்பட்டவாறு மாவு கட்டு போடப்பட்டு சிறையில் அடைத்திருக்கின்றனர். என்னுடைய கணவர் பொய்யாகுளம் தியாகுவை போலீஸார் என்கவுன்ட்டர் செய்யப்போவதாக தகவல் வருகிறது. எனவே என் கணவரைக் கண்டுபிடித்து அவரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில்தான் மாவுகட்டுடன் தியாகு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் குடும்பத்தினர் அங்குச் சென்றனர். தியாகுவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க