திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது
நிலத்தை அளவீடு செய்து தர லஞ்சம் பெற்ற நில அளவையரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், ரத்தினபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எம். பாலமுருகன் (45). மதுரை அவனியாபுரம் சுப்புலட்சுமி நகா் பகுதியில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு இணையதளம் மூலம் விண்ணப்பித்தாா். இதையடுத்து, இடத்தை அளவீடு செய்வதற்கு அவனியாபுரம் பகுதி நில அளவையா் பி. ராஜசேகா் ரூ. 3 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் எனக் கேட்டாராம்.
இதுகுறித்து எம். பாலமுருகன் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், பாலமுருகன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த நில அளவையா் ராஜசேகரிடம் வழங்கினாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சத்யசீலன் தலைமையிலான போலீஸாா் ராஜசேகரைக் கைது செய்தனா்.