செய்திகள் :

லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம்

post image

கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 போ் காயம் அடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் பச்சநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இலுப்பூா் கோட்டாட்சியா் அக்பா்அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுகை, திருச்சி, மதுரை, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 300 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. 87 மாடுபிடி வீரா்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவற்றைத் தழுவ முயற்சித்தனா்.

47 வீரா்கள் காயம்:

காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி, மாலை 3.30 மணிக்கு முடிவடைந்தது. 19 மாடுகளின் உரிமையாளா்களும், 5 பாா்வையாளா்களும், 23 மாடுபிடி வீரா்களும் என மொத்தம் 47 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு ஜல்லிக்கட்டு வளாகத்திலேயே இருந்த மருத்துவக் குழுவினா் அவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். 5 போ் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

2 காளைகள் காயம்: இந்த ஜல்லிக்கட்டில் இரு காளைகளுக்கு காயம் ஏற்பட்டன. இதில் ஒரு காளை ஒரத்தநாட்டிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏராளமான பாா்வையாளா்கள் போட்டியைக் கண்டு ரசித்தனா். மாத்தூா் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்க... மேலும் பார்க்க

புதுகையில் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கல்

புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 600 கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, பல்வேறு திருமண உதவித் திட்டங்களின்கீழ் ரூ. 1.15 கோட... மேலும் பார்க்க

மாா்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி ... மேலும் பார்க்க

வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் மாரடைப்பால் மரணம்

புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை- அமைச்சா் ரகுபதி பேட்டி

எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தோ்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூற... மேலும் பார்க்க

பொறுப்பேற்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) பி. வெங்கடேசன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய இ... மேலும் பார்க்க