செய்திகள் :

வஃக்ப் திருத்தச் சட்டம்: "விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி" - தவெக அறிக்கை!

post image

வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தத்தின் சில அம்சங்களுக்குத் தடைவிதித்துள்ளது.

நடிகர் விஜய் தலைமையில் செயல்படும் தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025 மீதான உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் உத்தரவு, நீதி, அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாப்புக்கான மகத்தான வெற்றி.

வக்ஃப் திருத்தச்சட்டம்

விஜய் தலைமையிலான எங்கள் மனு மற்றும் இது சார்ந்த மற்ற மனுக்கள் மீதான விசாரணையில் மதிப்பிற்குரிய நீதிமன்றம் நியாயம், சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை கடுமையாக வலுவிழக்கச்செய்யும் விதிகளை நிறுத்தி வைத்துள்ளது.

1. மாநில அரசுகள் விதிமுறைகளை உருவாக்கும் வரை, வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய இயக்கமுறைகள் இல்லாதவரை அந்த விதி நியாயமற்றதும், அரசமைப்புக்கு எதிரானதுமாகும்.

2. வக்ஃப் நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

வக்ஃப் வாரியம்

இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிப்பது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டை மீறுவதாகும்.

தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை சர்ச்சைக்குரிய வக்ஃப் நிலத்தின் நிலை மாறாமல் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.

3. மத்திய வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாதோர் நான்குக்கும் மேலாக இருக்கக் கூடாது, மாநில வாரியங்களில் மூன்றுக்கும் மேலாக இருக்கக் கூடாது.

இந்த வெற்றியை அடைவதற்கு சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட, விலைமதிப்பற்ற பங்களிப்பை அளித்த சட்ட குழுவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் கூறியிருக்கின்றனர்.

`எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் அருகதை அதிமுக-வைத் தவிர யாருக்கும் இல்லை' - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. புதிதாக வரும் ... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!' - பொன்னார் கூறுவது என்ன?

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போ... மேலும் பார்க்க

மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப்டம்ப... மேலும் பார்க்க

CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

* ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் * செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா?* டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன?* ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால... மேலும் பார்க்க

டெல்லியில் 'யெஸ்' ஆர் 'நோ' பரீட்சை... என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்... புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம்' என்ற முழுக்கத்தோடு தொகுதிவாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார் அதிமுக ... மேலும் பார்க்க