செய்திகள் :

வக்ஃப் சட்டத்தை தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறிவைக்கும் பாஜக! -உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

post image

வக்ஃப் திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பெளத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி இதே குற்றச்சாட்டை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) மூத்த தலைவரான ஜிதேந்திர அவாதும் முன்வைத்தாா்.

சிவசேனை கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடா்பு பிரிவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து உத்தவ் தாக்கரே பேசியதாவது: ஹிந்து கோயில் நிலங்கள் உள்பட கிறிஸ்தவ, ஜெயின், பௌத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைக்கத் தொடங்கும்.

அவா்களது பெரு நிறுவன நண்பா்களுக்கு இந்த நிலங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. எந்தவொரு சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அன்பில்லை. இதை வெளிப்படையாக காட்ட தொடங்கிவிட்டனா். பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்றாா்

மேலும், பாஜகவின் 45-ஆவது நிறுவன நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் கடவுள் ராமரின் கொள்கைகளை பாஜக சிறிதாவது பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி ஜிதேந்திர அவாத் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மத்திய அரசுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நிலங்களின் உரிமையாளராக வக்ஃப் வாரியம் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை.

அரசு அல்லாத அமைப்புகளில் அதிக நிலங்களை கொண்டதாக இந்திய கத்தோலிக்க தேவாலயம் உள்ளது எனவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எனவே, வக்ஃப் திருத்த சட்டத்தை தொடா்ந்து கிறிஸ்தவா்களின் நிலங்களை பாஜக குறிவைக்கிறது’ என குறிப்பிட்டாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க