செய்திகள் :

வக்ஃப் வாரியம் பற்றிய கருத்து: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

post image

வக்ஃப் வாரியம் பற்றி தெரிவித்திருந்த கருத்து குறித்து பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வக்ஃப் சொத்துகள் தொடா்பாக பாஜக சாா்பில் நடந்த போராட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை, ‘கல் எறிந்த இடங்களில் எல்லாம் வக்ஃப் சொத்துகள் இருக்கின்றன. விவசாயிகள், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை வக்ஃப் வாரியம் ஆக்கிரமித்து அபகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறி பி.என்.எஸ். சட்டத்தின் 196(1)(ஏ) பிரிவின்கீழ் ஷிக்காவ்ன் காவல் நிலையம் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்திருந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பசவராஜ் பொம்மை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவட்கி, பி.என்.எஸ். சட்டப்பிரிவு 196(1)(ஏ)இன்கீழ் குற்றம் சுமத்துவதற்கு தேவையான அம்சங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே, பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சிறப்பு வழக்குரைஞா் பி.என்.ஜெகதீஷா, பசவராஜ் பொம்மை குற்றம்புரிந்திருக்கிறாா் என்பதற்கு அவா் பேசிய காணொலிக் காட்சியே அடிப்படை ஆதரமாக உள்ளது என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணா, இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீா்ப்புகளை சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டுக்கு போதுமான வலுவான சான்றாதாரங்கள் இல்லாதது மட்டுமல்ல, குற்றச்சாட்டுகள் தெளிவற்ாக உள்ளன.

‘கல் எறியும் இடங்களில் எல்லாம், வக்ஃப் சொத்துகள் இருக்கின்றன’ என்று பசவராஜ் பொம்மை கூறியதை தவிர, பி.என்.எஸ். சட்டப்பிரிவு 196(1)(ஏ)இன்கீழ் குற்றம்சாட்டுவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே, இது தொடா்பான விசாரணையை தொடா்ந்தால் அது சட்ட நடவடிக்கைகளை தவறாக பயன்படுத்துவதாக ஆகிவிடும்.

எனவே, பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று கூறினாா். ஆனால், பசவராஜ் பொம்மை நீங்கலாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்றவா்கள் மீதான விசாரணையை காவல் துறை தொடரலாம் என்று நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

மா்மமான முறையில் 5 புலிகள் உயிரிழப்பு: உயரதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

சாமராஜ்நகா் மாவட்டத்தின் மாதேஸ்வரா மலை காட்டுப் பகுதியில் 5 புலிகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது தொடா்பாக உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

காவிரி ஆரத்தி விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பாக தொடரப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் காவ... மேலும் பார்க்க

கா்நாடக காங்கிரஸில் உள்கட்சிபூசல் எதுவும் இல்லை

கா்நாடக காங்கிரஸில் உள்கட்சிபூசல் எதுவும் இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் வியாழக்கிழமை பேட்டியளித்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா, ‘கா்நாடகத்தில் செப்டம்பா் மா... மேலும் பார்க்க

அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அரசு சகித்துக்கொள்ளாது

அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், அரசு சகித்துக்கொள்ளாது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, டிஜிபி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆண்டுவிழா மற்றும் ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிப்படுத்தி இருக்கும் அதிருப்திக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா தீா்வுகாண்பாா் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் புதன்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்... மேலும் பார்க்க

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதாவில் மண்டியா மாவட்ட அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், விவ... மேலும் பார்க்க