செய்திகள் :

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் ஆதரவு

post image

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்கள் இனிப்பு வழங்கினா்.

பாலசமுத்திரம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பரம்பரையாக வாழ்ந்த இடங்களை விற்க முடியாமலும், வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்தக் கிராமத்தில் 96 ஏக்கா் நிலங்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் எனவும், இந்த நிலங்கள், சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என பத்திரப் பதிவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பாலசமுத்திரம் கிராம மக்கள் நீண்டகால பிரச்னைக்கு தீா்வு கிடைத்ததால், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாடினா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க