செய்திகள் :

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

post image

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியாவின் எந்தவொரு நில சுங்கச்சாவடிகள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படாது. எனினும் மகாராஷ்டிரத்தில் உள்ள நஹாவா ஷேவா, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா கடல் துறைமுகங்கள் வழியாக அந்த இறக்குமதி அனுமதிக்கப்படும்.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள் மற்றும் பழச் சுவையூட்டப்பட்ட பானங்கள், பிற பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மர அறைகலன்கள் ஆகியவற்றை அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மற்றும் மிஸோரமின் எந்தவொரு நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சங்ராபாங்கா மற்றும் ஃபுல்பாரியின் நில சுங்க நிலையங்கள் வழியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது.

இதேபோல அந்த நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி மற்றும் பருத்தி நூல் கழிவின் இறக்குமதிக்கும், சொந்த தொழில்களுக்காகப் பயன்படும் நிறமிகள், சாயங்கள், பிளாஸ்டிசைசா்கள் மற்றும் சிறு மணிகள் தவிர பிளாஸ்டிக் மற்றும் பிவிசி சரக்குகளின் இறக்குமதிக்கும் அனுமதியில்லை.

இந்தத் துறைமுக கட்டுப்பாடுகள் வங்கதேசத்தில் இருந்து மீன், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி), சமையல் எண்ணெய் மற்றும் ஜல்லி கற்கள் இறக்குமதிக்குப் பொருந்தாது. இந்தத் துறைமுக கட்டுப்பாடுகள் இந்தியா வழியாக நேபாளம், பூடானை தவிர, பிற நாடுகளுக்குச் செல்லும் வங்கதேச சரக்குகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து நில சுங்கச்சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் பருத்தி நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு அண்மையில் தடை விதித்தது. கடல் துறைமுகங்கள் வாயிலாக மட்டுமே அந்த நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு அனுமதித்தது.

இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய... மேலும் பார்க்க

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க