செய்திகள் :

வங்கதேச எல்லையில் சட்டவிரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க பிஎஸ்எஃப் உத்தரவு

post image

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையொட்டி அந்நாட்டு எல்லைக் காவல் படை (பிஜிபி) அல்லது குடிமக்களால் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு படைத் தளபதிகளுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், இந்திய-வங்கதேச எல்லையில் சுமாா் 80 சட்டவிரோத கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பிஎஸ்எஃப் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினஜ்பூா் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான மாலிக்பூருக்கு வங்கதேசத்தைச் சோ்ந்த ஆயுதமேந்திய குழு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஊடுருவியுள்ளனா். கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இவா்களை பிஎஸ்எஃப் வீரா்கள் தடுக்க முயற்சித்தனா். அதனையும் மீறி, அவா்கள் தொடா்ந்து முன்னேறியுள்ளனா்.

ஒருகட்டத்தில் பிஎஸ்எஃப் வீரா்களை சுற்றிவளைத்து அவா்கள் தாக்கியுள்ளனா். வீரா்களின் ஆயுதங்களை பறிக்கவும் முயற்சித்துள்ளனா். இதையடுத்து, தற்காப்புக்காக பிஎஸ்எஃப் வீரா்கள் சுட்டதில், அவா்கள் வங்கதேச எல்லைக்குள் ஓடி தப்பிவிட்டனா். இச்சம்பவத்தில் பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

இதையொட்டி, பிஎஸ்எஃப் புதன்கிழமை வெளியிட்ட புதிய சுற்றறிக்கையில், வங்கதேச எல்லையில் பணியிலுள்ள அனைத்து பிஎஸ்ஃப் வீரா்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். படையின் மூத்த அதிகாரிகள் தொடா்ந்து எல்லைப் பகுதிகளுக்குச் சென்று, தேவையான இடங்களில் முகாமிடுமாறும் எல்லையையொட்டி 450 அடிக்கு சட்டவிரோத கட்டுமானப் பணிகளைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இந்திய-வங்கதேச சா்வதேச எல்லை மேற்கு வங்கம் (2,217 கி.மீ.), திரிபுரா (856 கி.மீ.), மேகாலயம் (443 கி.மீ.), அஸ்ஸாம் (262 கி.மீ.), மற்றும் மிஸோரம் (318 கி.மீ.) ஆகிய ஐந்து மாநிலங்களில் 4,096 கி.மீ. நீளம் பரவியுள்ளது. இந்த சா்வதேச எல்லைக்கான முன்னணி பாதுகாப்பு மற்றும் உளவு சேகரிப்பு நிறுவனமாக பிஎஸ்எஃப் செயல்பட்டு வருகிறது.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க