செய்திகள் :

`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளை பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?

post image

கர்நாடகா மாநிலம் விஜயபுர மாவட்டம் பசவனபாகேவாடியில் செயல்படுகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் 58 கிலோகிராம் மதிப்புள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் எட்டு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை

இது தொடர்பாக வங்கி அதிகாரி தெரிவித்ததாவது, மே 23 மாலை ஊழியர்கள் வழக்கம் போல வங்கியைப் பூட்டிச் சென்றிருக்கின்றனர். மே 24, 25 (சனி - ஞாயிறு) விடுமுறை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது.

மே 26 அன்று, பியூன் வங்கியை சுத்தம் செய்ய வந்தபோது, ​​ஷட்டர் பூட்டுகள் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டார். உடனடியாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சோதனையில், திருடர்கள் வங்கிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

Bank Robbery

பொது மக்கள் வங்கி கடனுக்காக டெபாசிட் செய்த நகைகள் என்பதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியிருக்கும் நிலையில், சூனிய சடங்குகள் மூலமும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காவல்துறை, ``குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக இயங்கி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று உறுதியளித்துள்ளது.

`500 ரூபாய்' - குழப்பத்தை ஏற்படுத்திய யூடியூப் வீடியோ; ``தவறான தகவலை பகிர வேண்டாம்'' - RBI

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது.பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் புதிதாக 200,... மேலும் பார்க்க

Man Mom: மன அழுத்தம்; அணைப்பு... சீன இளம் பெண்களிடம் வைரலாகும் 'ஆண் அம்மா' - அப்படி என்றால் என்ன?

தற்போதைய உணவு கலாசாரம், நுகர்வு கலாசாரம், பொருளாதாரத் தேவைகள் என சமீப காலமாக மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரித்திருக்கிறது. வேலை பளு, காதல் தோல்வி, குடும்ப சூழல் என இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்... மேலும் பார்க்க

சென்னை: 'பேசவே முடியாதவர் பாடும் அதிசயம்!' - விழிச்சவால் கொண்ட முதல் ஓதுவார் பிரியவதனா யார்?

சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோயிலில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவதானாவுக்கு ஓதுவார் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்த அவர் கோயிலில் பாடும் க... மேலும் பார்க்க

Bengaluru: `எங்களுக்கு கன்னடர்களை பிடிக்கும்’ - ஆட்டோ ஓட்டுரை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட பெண்

சாலையில் நடந்த வாக்குவாதத்தின்போது ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண், மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதை வீடியோ... மேலும் பார்க்க

Makeup: ஆள் அடையாளம் தெரியாமல் திணறிய ஃபேஸ் ஸ்கேனர்: கண்டித்த விமான நிலைய அதிகாரி; நடந்தது என்ன?

ஒரு காலத்தில் மேக்கப் தேவை இல்லை இயற்கை அழகே அழகு எனப் பேசப்பட்டது. ஆனால், கால ஓட்டத்தில் மேக்கப் என்பது என் தனி உரிமை. அதை நான் விரும்பும் வகையில் போட்டுக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என உரிமைக் ... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கி. இவர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதனால... மேலும் பார்க்க