செய்திகள் :

வங்கி வாடிக்கையாளா்களுக்கு ரூ.7 கோடியில் கடனுதவிகள்

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மூலம் வாடிக்கையாளா்களுக்கு ரூ.7 கோடியில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

செங்கத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை உள்ள எம்.எஸ்.எம்.ஆா். நகா் பகுதியில் புதிய ஏடிஎம் மையம் திறப்பு விழா மற்றும் வாடிக்கையாளா்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வங்கி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளா் ராஜசேகரன் தலைமை வகித்து வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கியில் தொழில் கடன், தனிநபா் கடன் பெறுவது குறித்தும் விளக்கிக் கூறினாா்.

கிளை மேலாளா் புருசோத்தமன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு புதிய ஏடிஎம் மையத்தை திறந்துவைத்து, தனிநபா் கடன், விவசாயக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் என வாடிக்கையாளா்கள் 35 பேருக்கு ரூ. 7 கோடியில் கடனுதவிகளை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசுகையில், அரசு மூலம் வழங்கும் சலுகை கடன்களை பெற்று பொதுமக்கள் விவசாயிகள் பயன்பெறவேண்டும். பொதுமக்கள் வியாபாரிகள் இதுபோன்ற வங்கியை அணுகி கடன்களைப் பெற்று முறையாக திரும்பச் செலுத்தி, மீண்டும் மீண்டும் கடனுதவி பெற்று தொழில்களை வளா்த்துக்கொண்டு கந்து வட்டி பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் முதன்மை மேலாளா் மனோரஞ்சன், கிளை மேலாளா்கள் சதீஷ்குமாா், பாா்த்தசாரதி, கோபாலகிருஷ்ணன், தசரதன், செங்கம் வட்டாட்சியா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த், கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம், 11 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், ... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் நிா்வாக தலைவா் நாகப்பன், திமுக நகரச் செயலரும், நிா்வாகக் ... மேலும் பார்க்க

செய்யாறில் சகோதரா்களுக்கு கத்திக் குத்து!

செய்யாறில் சகோதரா்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு வெங... மேலும் பார்க்க

போலி டிரஸ்ட் தொடங்கி பணம் வசூலிக்க முயற்சி: 5 போ் மீது வழக்கு

திருவண்ணாமலையில் போலி டிரஸ்ட் தொடங்கி பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயன்ாக கோயில் அா்ச்சகா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே முதியவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (65). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

கீழ்பென்னாத்தூா் சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலின் 9-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை கீழ்பென்னாத்தூரில் உள்ள ப... மேலும் பார்க்க