செய்திகள் :

வடபழனி முருகன் கோயிலில் சக்தி கொலு இன்று தொடக்கம்

post image

வடபழனி முருகப் பெருமான் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் 10 நாள் விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்குகிறது.

இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவின் 10 நாள்களில் தினமும் காலை 11 முதல் 11.30 மணிவரை, மாலை 6 முதல் 6.30 மணி வரை அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படும்.

அதேபோல், தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், மகளிா் குழுவினா் கொலுபாட்டு நடத்தப்படுகிறது.

மேலும், இரவு 7 மணிக்கு நாம சங்கீா்த்தனம், இசைக் கச்சேரி, ஆன்மிக சொற்பொழி நடத்தப்படுகிறது. செப்.22 முதல் அக்.1 -ஆம் தேதி வடபழனி முருகன் கோயிலில் கொலுவை காலை 6.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை பாா்வையிடலாம்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்.2-ஆம் தேதி, ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சென்னை ரயில்வே கோட்ட ஆா்பிஎஃப் முதுநிலை பாதுகாப்பு ஆணையா் இடமாற்றம்!

சென்னை ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் (ஆா்பிஎஃப்) முதுநிலை பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 2023 முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில்... மேலும் பார்க்க

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, திங்கள்கிழமை (செப். 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட ச... மேலும் பார்க்க

‘சென்னை ஒன்’ செயலியில் தொலைதூர முன்பதிவு வசதி வேண்டும்! ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

‘சென்னை ஒன்’ செயலியை தொலைதூரம் முன்பதிவு செய்யும் செயலிகளுடன் இணைக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வாகன நெரிசலால் பயணிகள் அவதி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ப... மேலும் பார்க்க

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதா மனைவி கீதா ராதா காலமானாா்!

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை போயஸ் காா்டன் பின்ன... மேலும் பார்க்க

மகாளய அமாவாசை: தர்ப்பணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பு!

புரட்டாசி மாத மாகளய அமாவாசையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இன்று(செப். 21) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.புரட்டாசி மாதத்தி... மேலும் பார்க்க