செய்திகள் :

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.

சிவகங்கையில் மாவட்டத் தலைவா் மு.க.புரட்சித் தம்பி தலைமையில் அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சகாய தைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மானாமதுரையில் வாடகைக் கட்டடத்தில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை மாற்றுத்திறனாளி ஆசிரியா்கள், வயது முதிா்ந்த ஆசிரியா்களின் அவதியைக் கவனத்தில் கொண்டு தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மானாமதுரை பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதற்கான அறை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ள நிலையில், அங்கு இடமாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை தாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இணையதளம் மூலமாக மாதாந்திர ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. பழைய முறையிலும் புதிய முறையிலும் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது.

தற்போது, இதில் ஏதேனும் ஒரு முறையைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனால், வருமான வரிப் பிடித்தத்தில் பெரும் குளப்பம் நிலவி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், குமரேசன், ரவி, மாவட்ட துணை நிா்வாகிகள் அமலசேவியா், பஞ்சுராஜு, முத்துகுமாா், கஸ்தூரி, கல்வி மாவட்ட நிா்வாகிகள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்க நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் இனி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவ... மேலும் பார்க்க

மே 1-இல் அரசு மதுபான கடைகள் அடைப்பு

மே தினத்தையொட்டி வருகிற வியாழக்கிழமை (மே 1) சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு சலுகைகள்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி

அரசு அலுவலா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி தெரிவித்தது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய சிவகங்கை மாவட்டச் செயலா் ந... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்: சாா்பு நீதிபதி அறிவுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞ... மேலும் பார்க்க