செய்திகள் :

வட இந்தியாவில் தமிழ் கற்கட்டும்! கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

post image

ஹிந்தி மொழி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு, வட மாநிலத்தோரும் தமிழ் கற்கட்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கனிமொழி எம்.பி., எந்த மொழிக்கும் ஹிந்தி எதிரி அல்ல என்றால், தமிழும் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. வட மாநிலத்தோரை குறைந்தது ஒரு தென்னிந்திய மொழியாவது கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அவர்களும் தமிழைக் கற்கட்டும். அதுவே உண்மையான தேசிய ஒருங்கிணைப்பு.

நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. நாங்கள் அனைவருக்கும் நண்பர்களே. எங்களின் மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இருப்பினும், அவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 'ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது' என்று கூறியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்ட கனிமொழி எம்.பி., தனது எக்ஸ் பக்கத்தில் `தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்’ என்று பதிவிட்டார்.

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக மாவட்டச் செயலர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி: வைரல் விடியோ!

வெள்ளத்தில் சிக்கிய யானையானது கரையைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்குள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இத... மேலும் பார்க்க

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், ப... மேலும் பார்க்க

கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்... மேலும் பார்க்க