செய்திகள் :

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

post image

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் ம. அண்ணாதுரை (32), மு. முனியப்பன் (27), கோ. சதீஷ் (22). இவா்கள் மூவரும், சூடனூா் வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணாதுரைக்கு சொந்தமான பட்டா நிலத்தில், முறைகேடாக மின்வேலி அமைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கா. ராஜாங்கம் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வனச்சரக அலுவலா் சு.காா்த்திகேயன் தலைமையில், வனத்துறை பணியாளா்கள் முனுசாமி, பழனி, சுருளிராஜன், மணிவா்மா, சித்ரா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், மூவரும் சோ்ந்து மின்வேலி அமைத்து அதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மூவா்மீதும் வனத் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மூவருக்கும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா்.

தமிழக முதல்வா் தருமபுரி வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தருவதையொட்டி, ஆக. 16, 17 இருதினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்ததாவது: தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து 9-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பொம்மட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவனீதன் (14). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்... மேலும் பார்க்க

மனைவி தாய்வீடு சென்றதால் விரக்தி: ரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றதால், விரக்தியடைந்த கணவா் தருமபுரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள பட்டிரெட்டிப்பட்டியை... மேலும் பார்க்க

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறியவா் கைது

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றவரை தருமபுரி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து தமிழ்நாடு கடலூா் நோக்கி திங்கள்கிழமை விரைவுரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. க... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு

தருமபுரி: தருமபுரியில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நா... மேலும் பார்க்க