'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன்...
வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஓடிடி: ஜோதிகா
திரைப்பயணத்தில் தான் எதுவும் திட்டமிடவில்லை என நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார்.
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.
46 வயதாகும் ஜோதிகா தற்போது ஹிந்தி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக ‘சைத்தான்’ என்ற ஹிந்தி படம் வெளியாகியது. தற்போது டப்பா கார்டெல் என்ற தொடர் வெளியாகியுள்ளது.
பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகா கூறியதாவது:
வயதான நடிகைகளுக்கு வாய்ப்பை வழங்கும் ஓடிடி
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை ஹிந்திக்கு கொண்டு வந்தது சைத்தான் படம். ஓடிடி தளத்தின் அசுர வளர்ச்சி பல மொழி நடிகர், நடிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து வயது பெண்களுக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
திரைப் பயணத்தில் நான் எதுவும் திட்டமிடவில்லை. அப்படியே போகிற போக்கில் செல்கிறேன். அப்படிச் செல்வதே அழகாக இருக்கிறது.
உண்மையான கதாபாத்திரங்களில் நடிப்பது கடினம். ஏனெனில் அந்தக் கதாபாத்திரங்களில் உங்களை நீங்களே பார்க்கலாம். உங்களால் முடிந்த அளவுக்கு என்னை நீங்கள் உண்மையாக உணரலாம். ஆனால், அது அரிதாகத்தான் அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன.
டப்பா கார்ட்டெல் அற்புதமான ரைட்டிங்
டப்பா கார்ட்டெலில் பல விதமான அடுக்குகள் உள்ளன. அது எழுதப்படுள்ள விதம் எனக்கு பிடித்திருக்கிறது. கணபதி பூஜையில் தனியாக இருவர் மட்டுமே பிரேமில் இருப்போம். மொத்த இணையத் தொடரிலும் இது அரிதாக இருக்கும். திரையில் இருவர் மட்டுமே பார்க்கும்போது புல்லரித்தது.
நாங்கள் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிக்கிறோம். மிகப்பெரிய நடிகர்களின் படங்களும் நாங்கள் தனித்த முத்திரை பதித்துள்ளோம். தற்போது மேன்மையான பல கதைகள் சொல்லப்படுகின்றன. அது நிச்சயமாக வளர்ச்சிதான்.
எங்களது சௌகரியமான நிலையிலிருந்து வெளியேறி நாங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்கிறோம் எனக் கூறினார்.