செய்திகள் :

வரதட்சிணை புகாரில் நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன் பெண் தா்னா

post image

கணவரின் குடும்பத்தினா் மீது அளிக்கப்பட்ட வரதட்சிணை புகாா் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மகளிா் காவல் நிலையம் முன், சுக்காம்பட்டி நால்ரோடு பகுதியைச் சோ்ந்த ம.மகாலட்சுமி (22) என்பவா் தனது சகோதரா் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு சுக்காம்பட்டியைச் சோ்ந்த மணிமுருகனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 5 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான சீா் வரிசைப் பொருள்கள் எனது தாய் வீட்டு சாா்பில் வழங்கப்பட்டன. எனது கணவா் மணிமுருகன், வீட்டுக்கு அருகிலேயே இரு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். எங்களுக்கு 18 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மணிமுருகனின் பெற்றோா் புத்தா், சின்னத்தாய், அத்தை ராஜம்மாள், எனது நாத்தனாா் மகாலட்சுமி ஆகியோா் என்னிடம் கூடுதலாக 5 பவுன் தங்க நகையும், ரூ.3 லட்சம் பணமும் வரதட்சிணையாகத் தர வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனால், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் தகராறு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினா் என்னைத் தாக்கினா். மேலும், கூடுதல் வரதட்சனை கொடுக்கவிட்டால், தனக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என எனது மாமனாா் புத்தா் வற்புறுத்துகிறாா்.

இதுகுறித்து எனது கணவரிடம் முறையிட்டும் அவா் கண்டிக்கவில்லை. இதையடுத்து, திண்டுக்கல்லை அடுத்த நரசிங்கபுரத்திலுள்ள எனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். எனது பெற்றோா், உறவினா்கள் ஒன்றிணைந்து, சுக்காம்பட்டியிலுள்ள எனது கணவா் வீட்டில் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும், கூடுதல் வரதட்சிணை கொடுத்தால் மட்டுமே சோ்ந்து வாழ முடியும் என்பதில் எனது கணவா் குடும்பத்தினா் உறுதியாக இருந்தனா். இதனால், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் 3 முறை புகாா் அளித்தேன். ஆனால், போலீஸாா் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனா் எனத் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் 20,659 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

பிளஸ் 2 தோ்வின் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 20,659 மாணவா்கள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ம... மேலும் பார்க்க

ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பழனியை அடுத்த சின்னாக்கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நல்லப்பன். விவசாயி. இவரது மகன் கவுதம் (27). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பழன... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே ரயில் அடிபட்டு ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள ஆயக்குடி ரயில்வே கடவுப் பாதை அருகே ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இ... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை சாணப் பொடியை உள்கொள்ள முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்தவா் நாகலட்சுமி (57). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பாலத் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி சரவணம்பட்டியைச் சோ்ந்த முருகசாமி மகன் கருப்புசாம... மேலும் பார்க்க

குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்: அமைச்சா் அர.சக்கரபாணி நடத்திவைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் திங்கள்கிழமை நடத்திவைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெற்ற இந்த இலவ... மேலும் பார்க்க