செய்திகள் :

வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை: ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்

post image

ஆன்மிக தலைவர் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மீண்டும் மேற்கு உத்தரப் பிரதேசத்தை ’மினி பாகிஸ்தான்’ என்றேக் கூறுவேன் எனப் பேசியது சர்ச்சையக் கிளப்பியுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால், இவர் காங்கிரஸ் மீது தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு...

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நீடித்தது. பின்னர், மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சி இல்லாததால், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் நிரபராதி என தீா்ப்பளித்துள்ளாா்.

வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை...

இந்நிலையில், இது குறித்து ஆன்மிக தலைவர் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் இன்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தை ’மினி பாகிஸ்தான்’ என்கிறேன். சாம்பல் பகுதியில் இருந்து ஏன் ஹிந்துக்கள் வெளியேறுகிறார்கள்? மீரட், முசாஃபர்நகர் பகுதிகளிலும் ஹிந்துகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

மாலேகான் வழக்கில் காங்கிரஸைத்தான் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. அவர்களால் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இன்று வெற்றிப் பெற்றுவிட்டோம்.

விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து, காங்கிரஸ் மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள், ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள் என்றார்.

Spiritual leader Jagadguru Rambhadracharya reiterated his 'Western UP is like a mini Pakistan' remark on Sunday and said that many people are dominating Hindus in Uttar Pradesh to migrate.

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.அ... மேலும் பார்க்க

மோடியின் தாயார், மோடியை சித்திரித்து ஏஐ விடியோ: காங். மீது வழக்கு!

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, அவரது தாயார் ஆகியோரைச் சித்திரித்து சர்ச்சைக்குரிய விதத்தில் காணொலி வெளியிட்டதகாக எதிர்க்கட்சியான பிகார் மாநில காங்கிரஸ் மீது க... மேலும் பார்க்க

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது இளைஞர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 19 வயது இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயது என்பதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலை..! மோடி தொடக்கிவைத்தார்!

அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இந்த ஆலையினால் அஸ்ஸாம் மாநிலத்திற்கு ரூ.200 கோடி லாபம் கிடைக்குமென எதிர்பார்க்... மேலும் பார்க்க

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக: ஜெ.பி. நட்டா

உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக இருப்பதாக ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்திற்கு துணைநிற்கும் காங்கிரஸ்..! மோடி குற்றச்சாட்டு!

அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தின் பக்கம் நிற்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய... மேலும் பார்க்க